தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் – டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே நிலத்தகராறில், செல்வன் என்பவர் கடந்த 17-ம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்ட ஆறுபேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல் ஆய்வாளார் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை பெருநகர 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இருவரையும் 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கவுதமன் உத்தரவிட்டார். இதையடுத்து சொக்கன் குடியிருப்பு செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Exit mobile version