அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தனிப்பிரிவை ஏன் தொடங்க கூடாது?

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனி பிரிவை தொடங்குவது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மச்சிநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனி பிரிவை தொடங்குவது குறித்து பதிலளிக்கும்படி அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Exit mobile version