பொற்றாமரை குளத்தில் நீரை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

அத்திவரதரை வைத்துள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தில் உள்ள நீரை வைத்து நிரப்ப கூடாது என்று, ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து நிரப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

47 நாட்கள் தரிசனத்திற்கு பிறகு, அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு பொற்றாமரை குளத்தில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீர் பாசி படிந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

இது தொடர்பாக வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொற்றாமரை குளத்து நீரை கொண்டு அத்திவரதரை வைத்துள்ள அனந்தசரஸ் குளத்தை நிரம்ப கூடாது என உத்தரவிட்டது. மாற்றாக ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து அனந்தசரஸ் குளத்தை நிரப்பலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version