குமரி அருகே காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை

கன்னியாகுமரி அருகே, தமிழக – கேரள எல்லையான காரகோணத்தில் காதல் விவகாரம் தொடர்பாக காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரகோணம் பகுதியை சேர்ந்த அஜித் என்பவரின் மகள் அஷிகாவும், அதே பகுதியை சேர்ந்த அனு என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஷிகாவின் தந்தையிடம் திருமணம் குறித்து அனு பல முறை கேட்டுள்ளார். அதற்கு அஷிகாவின் தந்தை மறுத்ததால், ஆத்திரமடைந்த அனு, வீட்டில் தனியாக இருந்த அஷிகாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவரும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொண்டார். தகவலறிந்து  சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளறடை காவல்துறையினர் உடல்களை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  

Exit mobile version