கஜா புயல் பாதிப்பு – மணப்பாறை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு

மணப்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு செய்தார்.

கஜா புயலால் மணப்பாறை, வையம்பட்டி மற்றும் மருங்காபுரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள்,
பள்ளிக்கட்டிடங்கள் சேதமடைந்தன. இதையடுத்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து மின் வாரிய ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்தனர்.

Exit mobile version