உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்

கோவை செல்வபுரம் மற்றும் இடையர்பாளையம் பகுதியில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,70 ஆண்டுகால அத்திக்கடவு அவிநாசி பிரச்சினையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தீர்த்து வைத்துள்ளதாக கூறினார்.மேலும் கோவையில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version