ஜல்லிகட்டை போன்று மல்லுகட்டி பட்டாசு தொழிலை காப்போம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஜல்லிக்கட்டைப் போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை பாதுகாப்போம் என்று, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

சிவகாசியில், பட்டாசு தொழிலில் எற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி சங்க நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டாசு ஆலைகளை திறக்கவும், பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு உரிய சட்ட போராட்டம் நடத்தி உரிய தீர்வு காணும் என்றார்.

பேரியம் நைட்ரேட் என்ற மூலப் பொருட்கள் தடையால் 60 சதவிகிதம் பட்டாசு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பட்டாசு தொழிலாளர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை பாதுகாப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

 

 

Exit mobile version