தமிழக சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் 2-வது நாளான இன்று, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று துவங்கியது. இந்தநிலையில், கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று, இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் தனபால் முன்மொழிந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன், மருத்துவர் ஜெயசந்திரன், எஸ்.டி. உக்கம்சந்த் மற்றும் கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். பின்னர், மறைந்தவர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ.கே.போஸ் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் கருணாநிதி ஆகியோருக்கு துணை முதலமைச்சரும், பேரவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

Exit mobile version