தேனி அருகே வழக்கறிஞர் கொலை வழக்கில் ஒருவர் கைது

தேனி அருகே வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த அனுமந்தன்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் வழக்கறிஞர் ரஞ்சித்குமார், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக 11 பேர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தேவதானப்பட்டி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் செல்வம் என்பதும், வழக்கறிஞர் ரஞ்சித் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version