தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு !

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோவையில் வீடு புகுந்து
துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை மற்றும் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை, திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்களை பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நிர்வாகத்திறனற்ற திமுக ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி என்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். இந்த விடியா அரசின் முதல்வர், உடனடியாக மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version