கும்பக்கரை அருவியில் குளிக்க 15- வது நாளாக தடை

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிக்க 15- வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கொடைக்கானல் மலை பகுதியிலிருந்து வரும் அதிகப்படியான நீரால், கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிடவோ, அருவியில் குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 15-வது நாளாக தடை விதிக்கப்பட்டு இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Exit mobile version