”மு.க.ஸ்டாலின் பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்” – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு மாற்றான தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தான். அதனால்தான் ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் கூட மறைமுகமாக பல்வேறு வகையில் பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்” என்று பேசினார்.

Exit mobile version