கொடநாடு விவகாரம் எதிர்கட்சிகளால் புனையப்பட்ட நாடகம்: தம்பிதுரை

கொடநாடு விவகாரம் எதிர்கட்சிகளால் புனையப்பட்ட நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளையொட்டி கோவை அவினாசி சாலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மக்களவை துணை சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடநாடு விவகாரம் புனையப்பட்ட ஒரு நாடகம் என்றும் அதில் எந்த உண்மையுமில்லை என்றும் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகள் நாடகமாடி கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற வழியில்லை என்றும் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து அ.தி.மு.க. முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version