கொடைக்கானலில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பட்டால் ஏற்படும் தீங்குகள் குறித்து,  பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை தவிர்க்கக் கோரும் பதாகைகளை ஏந்திச் சென்றனர். முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்ற பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Exit mobile version