சேலத்தில் ஜாமீனில் வந்த சிறை வார்டன் வெட்டி கொலை

சேலத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்த சிறை வார்டன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சேலம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ், சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஆடி கார் எரிப்பு வழக்கில் கைதாகி, 10ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்த மாதேஷ், அண்மையில் வெளியில் சென்றபோது, காரில் வந்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம்
என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்தவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version