வைரலாகும் கேரள முதல்வர் செல்ஃபி – நெகிழும் நெட்டிசன்ஸ்

கேரளா முதல்வர் பினராயி விஜயன் மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. கேரளாவை ஆட்சி செய்த முதல்வர்களில் மிகவும் சிறப்பானவர் என்று இவரை பலரும் புகழ்ந்து வருகிறார்கள். கேரளாவில் மழை வெள்ளம் வந்த போது மக்கள் இவருக்கு பெரிய ஆதரவு தந்தனர்.

இந்த நிலையில் மாற்றுத் திறனாளி பிரணவ் என்ற சிறுவன் இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து கேரளா வெள்ளத்திற்காக அவர் நிதி உதவி வழங்கினார்.

இந்த நிதி உதவி வழங்கிய பிரணவ்க்கு கைகள் இல்லை. இதனால் அவர் தன்னுடைய கால்கள் மூலம் இந்த பணத்தை கொடுத்தார். அதோடு இவர் தன்னுடைய காலால் முதல்வர் பினராயி விஜயன் உடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

முதல்வர் பிரணவ் காலால் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டார். அதோடு, காலால் எடுக்கும் செல்பியில் சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

Exit mobile version