ஜூன் 5 முதல் தென் மேற்கு பருவமழை துவக்கம்!

தென்மேற்கு பருவமழை உருவாக சாதகமான சூழல் நிலவுவதால் ஜீன் 5 ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை உருவாவதற்கு சாதகமான சூழல் வலுபெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவமழை தென் அரபிக்கடல், மாலத்தீவு, குமரி கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல், கிழக்கு மத்திய வங்கக் கடல், வடகிழக்கு வங்க கடலின் சில பகுதிகளில் மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உள்ளதால் ஜீன் 5 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஜீன் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Exit mobile version