காவலன் செயலி குறித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு

சென்னையில் இந்தியா – மேற்கிந்தியத் தீவு அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெரிய எல்.இ.டி திரையில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடங்கப்பட்ட காவலன் செயலி குறித்துத் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகச் சென்னையில் நேற்றுக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு ஆய்வாளர் சீதாராமன், காவலன் செயலி குறித்துப் பெரிய திரை மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

Exit mobile version