கஜா புயல் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது- ஜான்பாண்டியன்

கஜா புயல் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு போர்க்கால வேகத்தில் சிறப்பாக செயல்படுவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில், மீட்புப் பணிகளை செய்து வருவதாக பாராட்டினார். எதிர்க்கட்சியினர் குறை கூறுவது ஒன்றும் புதிதல்ல என்று அவர் கூறினார்.

Exit mobile version