விவசாயி வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், ரொக்கம் கொள்ளை

விவசாயின் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்படூர் கிராமத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்ற விவசாயி, விவசாய வேலைகளுக்காக நேற்று வங்கியில் இருந்து 2 லட்ச ரூபாயை எடுத்து வந்து தனது வீட்டில் வைத்துள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து வீட்டில் உள்ளே இருந்த 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 31 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.

Exit mobile version