ஒன்றரை கிலோ நகைக்காக நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, கார் ஓட்டுநர்

திருச்சி அருகே, ஒன்றரை கிலோ நகைக்காக, நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, அதே கடையின் கார் ஓட்டுநர் உட்பட 7 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருச்சி-கரூர் புறவழிச்சாலையில், பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது.  இந்த கடையில், மார்ட்டின் ஜெயராஜ் என்பவர் பணியாற்றி வந்தார்.

நகைக்கடை உரிமையாளர் இவரிடம் 75 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து, சென்னையில் இருந்து ஒன்றரை கிலோ நகையை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

சொன்னபடி நகைகளை வாங்கிக்கொண்டு ஊழியர் மார்ட்டின் வராததால், சந்தேகமடைந்த நகைகடை உரிமையாளர், உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், மார்டினுடன் நகைகளை வாங்கி வர அனுப்பட்ட கார் ஓட்டுநரே, ஒன்றரை கிலோ நகைகளை கொள்ளையடிப்பதற்காக, ஆட்களை வைத்து மாட்டினை கொலை செய்து, நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், கொலை செய்யப்பட்ட மார்டினை திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே புதைத்ததையும் அறிந்து, கொலைக்கு தொடர்புடைய கார் ஓட்டுநர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Exit mobile version