ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளை

ராமநதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 60 சவரன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழக்கரை ஸ்ரீ நகரில் வசித்து வரும் முருகேசன், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதையடுத்து, நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 70 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வீட்டிற்கு திரும்பிய முருகேசன் குடும்பத்தினர், வீட்டின் கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version