சாய தொழிற்சாலை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஈரோட்டில் சாய தொழிற்சாலை உரிமையாளர் வீட்டில் இருந்து 9 லட்சம் ரூபாய் மற்றும் 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகேயுள்ள தட்டாங்காட்டை சேர்ந்த மணி என்பவர் அப்பகுதியில் சாய பட்டறை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 9 லட்சம் ரூபாய் மற்றும் 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் இந்தக் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version