விபத்தில் உயிருக்கு போராடியவர்களிடம் பணம், நகை கொள்ளை: 3 பேர் கைது

ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த தம்பதியிடமிருந்து 13 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் வைகை அணை பகுதியில், சிவபாண்டி என்பவர் தனது மனைவி சுங்கம்மாளுடன் புதுமனை இல்ல விழாவிற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வைகை அணையை அடுத்த சேடப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சிவபாண்டிய வைத்திருந்த 13 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், முருகேசன், முத்துப்பாண்டி, ராமகிருஷ்ணன் ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

Exit mobile version