‘இவன் ஒரு பக்கம் அவன் மறுபக்கம்’ – ஜடேஜாவும் அக்சரும் அசத்தல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிறகு களம் இறங்கிய இந்திய அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடி 120 ரன்கள் சேர்த்தார். அணிக்கு அவரே பக்க பலமாய் இருந்து வந்தார். அவர் அவுட் ஆன நிலையில் ஜடேஜாவும் அக்சர் பட்டேலும் நிலைத்து நின்று அணிக்கு ரன்களை குவித்தனர். இன்னும் டிக்ளேர் செய்யவில்லை. நாளையும் இவர்களின் அதிரடி ஆட்டம் இருக்கும். இன்றைய நாள் முடிவில் ஜடேஜா 9 பவுண்டரிகள் அடித்து 66 ரன்கள் சேர்த்து இருக்கிறார். 8 பவுண்டரிகள் அடித்து அக்சர் 52 ரன்கள் சேர்த்துள்ளார். இருவரும் சேர்ந்து வலுவான பார்ட்னர்ஷிப்பை அளித்துள்ளனர். இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் சேர்த்திருந்தது.

Exit mobile version