ஹாங்காங்கில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும்: ஜாக்கிசான்

மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் ஹாங்காங்கில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று நடிகர் ஜாக்கிசான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

குற்றங்சாட்டப்படும் ஹாங்காங்வாசிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க அனுமதிக்கும் சட்டத்தை கைவிட வலியுறுத்தி ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள நடிகர் ஜாக்கிசான், தான் பிறந்தது ஹாங்காங் என்றாலும் உலக அளவில் சீனாவை சேர்ந்த நபராகவே அறியப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பிறந்த நகரமான ஹாங்காங்கையும், சீனாவையும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஹாங்காங்கில் மீண்டும் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version