பணித்திறனாய்வு போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக காவல்துறையினருக்கு, திரிபாதி வாழ்த்து

உத்தரபிரதேசத்தில் தேசிய அளவில் நடைபெற்ற காவல்துறைக்கான பணித் திறனாய்வுப் போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக காவல்துறையினருக்கு, காவல்துறை இயக்குநர் திரிபாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி தொடங்கி கடந்த 20 ஆம் தேதி நிறைவடைந்த போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக காவல்துறையினர் 4 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் பரிசுகளை வழங்கினார்.

Exit mobile version