கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆனார் ராகுல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

13-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், எட்டு அணியின் உரிமையாளர்கள் பங்கேற்று வீரர்களை ஏலம் எடுத்தனர். மொத்தமாக 62 வீரர்கள் முதல்நாள் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.

இதில், கலந்துக் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தற்போது, இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் கே.எல்.ராகுல், பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். கேப்டனாகவும் ராகுல் சிறந்து விளங்குவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஏலத்திற்கு முன்பாக நடைபெற்ற வீரர்கள் வர்த்தகத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் மாற்றப்பட்டனர். கடந்த இரண்டு வருடங்களாக கேப்டனாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வழிநடத்தி வந்த அஸ்வினை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணி வீரர்களின் பட்டியல்:

கிறிஸ் கெய்ல், மாயங்க் அகர்வால், கருண் நாயர், சர்பராஸ் கான், மந்தீப் சிங்,  ஷெல்டன் கோட்ரெல் (ரூ 8.5 கோடி), இஷான் பொரல் (ரூ 20 லட்சம்), ரவி பிஷ்னோய் (ரூ 2 கோடி), முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங், ஹார்டஸ் வில்ஜோன், எம் அஸ்வின், ஜே சுசித், ஹர்பிரீத் ப்ரார் , தர்ஷன் நல்கண்டே, க்ளென் மேக்ஸ்வெல் (ரூ. 10.75 கோடி), ஜேம்ஸ் நீஷாம் (ரூ .50 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (ரூ .3 கோடி), கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா (ரூ.50 லட்சம்), தாஜிந்தர் சிங் தில்லான், கே.எல்.ராகுல் (சி), நிக்கோலஸ் பூரன், பிரப்சிம்ரன் சிங் (ரூ. 55 லட்சம்)

Exit mobile version