ஒழுங்கீனமாக நடந்து கொண்ட விராட் கோலி: ஐ.பி.எல். நிர்வாகம் எச்சரிக்கை

ஐபிஎல் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்ட பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியை ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தார். பின்னர், விரக்தியுடன் வெளியேறிய கோலி, பெவிலியனில் வீரர்கள் அமர்வதற்காக போடப்பட்டிந்த நாற்காலியை பேட்டால் குத்தி, தள்ளிவிட்டு சென்றார்.

 

இந்தக் காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவிலும், நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டன. இந்த நிலையில், போட்டியின் விதிகளை மீறிய கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை தொடரும் பட்சத்தில் போட்டித் தொகையில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Exit mobile version