குழந்தையை மீட்க தொடரும் தீவிர மீட்புப்பணிகள்

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 3 மடங்கு திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம், மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு வந்ததடைந்தது.

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது இருக்கு ரிக் இயந்திரத்தை விட 3 மடங்கு திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம், மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு வந்ததடைந்தது. குறிப்பிட்ட அடிகளுக்கு பிறகு உள்ள பாறைகளை வேகமாக துளையிடும் வகையில், இந்த புதிய ரிக் இயந்திரம் செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து புது ரிக் இயந்திரத்தை பொறுத்தும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதன் பிறகே, குழந்தை சுர்ஜித் மீட்க எவ்வள்வு நேரம் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Exit mobile version