மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!

வெளிமாநிலத்தவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்தது.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த ஜூஜூவாடியில், வருவாய்துறை அதிகாரிகள் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும், இ-பாஸ் முறையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாநில வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இ-பாஸ் இல்லாத பட்சத்தில் அவ்வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் பயணிகள் முகக்கவசம் அணிவதையும், காரில் செல்லும் போது, அதிகபட்சமாக மூன்று நபர்கள் மட்டுமே பயணிக்கலாம் என்பன உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Exit mobile version