பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தை!

நாட்டிலேயே முதல் முறையாக பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு குழந்தை பிறந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஜியா பவல் என்பவர் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை ஆவார். மேலும், அதே மாநிலத்தை சேர்ந்த ஜஹாத் என்பவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஜஹாத் ஆணாக மாறியபோதும், கர்ப்பப்பை அகற்றப்படாததால், அவர் கருத்தரிப்பது சாத்தியம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி கருத்தரித்த அவர், சிசேரியன் மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதை, ஜியா பவல் மகிழ்ச்சியுடன் தனது இன்ஷ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version