கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு 5 லட்சம் உயிரிழப்பை தாண்டிய மூன்றாவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 394 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 9 புள்ளி 27 சதவீதமாக உள்ளது.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 72 பேர், ஒரே நாளில் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 55 ஆயிரம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம், அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு 5 லட்சம் உயிரிழப்பை தாண்டிய மூன்றாவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 2 லட்சத்து 46 ஆயிரத்து 674 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்த 14 லட்சத்து 35 ஆயிரத்து 569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 168 கோடியே 47 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

Exit mobile version