மதுரை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்துவதாக தகவல் -100 போலீஸார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து 100 சிறைக்காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மத்திய சிறையில் சமீபத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் பார்த்திபன் என்ற கைதிகளிடம் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறை கைதிகளுக்கு பாடமெடுக்கும் ஆசிரியர் செந்தில்குமார் என்பவர் மூலம் கைதிகளுக்கு செல்போன் தரப்படுவதாக தெரிய வந்தது.

இதையடுத்து செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து மற்ற கைதிகளிடம் செல்போன் இருக்கிறதா என்று டி.எஸ்.பி தலைமையில் 100 போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Exit mobile version