2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா (87 ரன்கள்), தவான் (66 ரன்கள்) ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இதனையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்தது.

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Exit mobile version