பாகிஸ்தான் அமைச்சரின் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம்

பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான மிர்வாய் உமர் பரூக்குடன் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி தொலைபேசியில் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி ஆகிய இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தினர். இருவரின் பேச்சு இந்தியாவின் ஒற்றுமை, நல்லிணக்கம், இறையாண்மை உள்ளிட்டைவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பாகிஸ்தான் அமைச்சரின் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோகைல் மகமூத்துக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து இந்திய அரசு சார்பில் வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version