ஆப்கானிஸ்தானிற்கு மேலும் 2 அதிநவீன ஹெலிகாப்டர்களை வழங்கியது இந்தியா

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு மேலும் 2 அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் அரசு படைகள் மற்றும் அமெரிக்க படைகள் ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையில், அந்நாட்டிற்கு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இந்திய 2 பில்லியன் டாலர்வரை முதலீடு செய்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் ராணுவத்தை வலிமைபடுத்த 4 போர் ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு விமானப்படைக்கு 2 அதிநவீன மிக்-24 ரக அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை வழங்கியது. இந்நிலையில், மேலும், 2 ஹெலிகாப்டர்களை இந்தியா தூதர் வினய்குமார் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் வழங்கினார்.

Exit mobile version