தெலங்கானாவில் அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி

தெலங்கானாவில் தறிக்கெட்டு ஓடிய அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார், 3 பேர் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம், செகந்தராபாத்தில் அரசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தவறான பாதையில் சென்று கார், ஆட்டோ மற்றும் பாத சாரிகளின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார், 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version