ஸ்ரீரங்கத்தில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசையை ஒட்டிப் புனித நீராடிய பொதுமக்கள், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக எள், தர்ப்பண நீர்,
அரிசி, வாழைக்காய், ஆகியவற்றைக் கொண்டு வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள கருட மண்டபத்திலும் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். மேலும் முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட காவிரிக் கரை ஊர்களிலும் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

Exit mobile version