பெரம்பலூர் மாவட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்களில் 95 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பினர். பள்ளிக்கல்வித்துறை உத்தரவை ஏற்று, அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 95 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பினர். ஆரம்பப் பள்ளிகளில் 60 சதவிகித ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு வந்தனர். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் வந்தது, மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.