வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 5 ரவுடிகள் கைது

வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 5 ரவுடிகளை, சிசிடிவி பதிவைக் கொண்டு சென்னை விருகம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தங்களை சிலர் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றதாக,ஹரஜ்கான் மற்றும் அழகுவேல் ஆகியோர் சென்னை விருகம்பாக்கம், காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து அவர்களது புகாரை ஏற்று, உரிய பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில்,ஹரஜ்கான் மற்றும் அழகுவேல் ஆகிய இருவரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி , ரவுடிகள் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. பின், இச்சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி பிரபாவை கைது செய்த காவல்துறையினர், அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நரசிம்மன், முருகன் உட்பட 5 பேரைக்கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version