ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலக தயார்:அமைச்சர் வேலுமணி

தன்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலக தயாராக இருப்பதாகவும், தவறும்பட்சத்தில் ஸ்டாலின் விலகுவாரா என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி கரடிமடை பகுதியில் மக்களவை வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் வேலுமணி பிரசாரம் செய்தார். அப்போது அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி அமைச்சர் வேலுமணி வாக்கு சேகரித்தார். மேலும், திமுக தலைவர் வேண்டுமென்றே ஏதேதோ பேசி பொய் பிரசாரங்களை செய்து வருவதாக கூறினார். மேலும், தன்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலக தயாராக இருப்பதாகவும், தவறும்பட்சத்தில் ஸ்டாலின் விலகுவாரா என கேள்வி எழுப்பினார்.

Exit mobile version