அரசியல் திருப்பம்: மீண்டும் ஆட்சியமைக்கப் போகும் அதிமுக

தமிழக அரசியல் வார இதழில் 234 தொகுதிகளிலும் நடத்திய கருத்துக் கணிப்பில், 123 இடங்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதி வாரியாக, எடப்பாடியில் முதலமைச்சர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் எனவும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குமாரப்பாளையத்தில் அமைச்சர் தங்கமணி, விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் வெற்றி பெறுவார்கள் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேபோல அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு, பென்னாகரத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வெற்றி பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

Exit mobile version