2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் – அமைச்சர் உறுதி

தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ‘அவாஸ் திவாஸ்’ வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிரதமர் குடியிருப்பு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘ அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம்’ குறித்து எடுத்துரைத்தார். கொரோனாத் தொற்று காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு 14ஆவது மத்திய நிதி ஆணையம் மூலம் வழங்க வேண்டிய, 1,254 கோடியே 38 லட்ச ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version