குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன்!

கோவை கவுண்டம்பாளையத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டார். கோவை கவுண்டம்பாளையம் ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்த முத்துராஜன் என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது 2 மகன்களும் வெளியூரில் வசித்து வந்த நிலையில் முத்துராஜன், மனைவி மணிமேகலை, மருமகள் பவித்ரா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். முத்துராஜன் மற்றும் மணிமேகலைக்கு இடையே குடும்ப தகராறால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜன், தூங்கி கொண்டிருந்த மணிமேகலையின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார். இதனையடுத்து மஞ்சள் சாயத்தை குடித்து முத்துராஜனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மருமகள் பவித்ரா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version