டெல்லியின் காகித அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

டெல்லியின் நரைனா பகுதியில் செயல்பட்டு வரும் காகித அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியின் பல பகுதிகளில் பாதுகாப்பு அற்றநிலை காணப்படுவதாக தொடர் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்கு தனியார் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நரைனா பகுதியில் செயல்பட்டு வரும் காகித அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்ப்டடது. தீயை அணைக்கும் பணியில் 20 தீயணைப்பு வாகனங்களில் வந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

Exit mobile version