இந்து மத தலைவர்கள் கொலை வழக்கு: 2 தீவிரவாதிகள் வீட்டில் புலனாய்வு பிரிவு சோதனை

இந்து மதத் தலைவர்கள் கொலை வழக்கு மற்றும் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் வீட்டில் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் இந்து மதத் தலைவர்கள் சிலரை கொலை செய்த வழக்கு மற்றும் கொலை செய்ய முயன்ற வழக்குகளில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படங்களை தமிழக காவல்துறை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள 4 தீவிரவாதிகளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே, 2 தீவிரவாதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்த காவல்துறையினர், அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். நாகர்கோவிலை சேர்ந்த, செய்யது அலி நவாஸ் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில், மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய பொருட்களை பறிமுதல் செய்தனர். அதே போல், திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் வீட்டிலும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள், 2 செல்போன்கள், ஒரு மடிக்கணினி மற்றும் வங்கி கணக்கு புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் இந்து முன்னணி தலைவர் சுரேஷ் என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version