தமிழகத்தில் இந்தி திணிப்பு நடக்காது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் இந்தி பாடத்தை கட்டாயமாக்க முடியாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு என்பது தமிழகத்தில் நடக்காது எனவும் இந்தி பாடத்தை கட்டாயமாக்க முடியாது என்றும் அவ்வாறு ஒரு நிலைமை ஏற்பட்டால் தமிழக முதலமைச்சர் கடுமையாக போராடுவார் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் முடிவு எடுப்பார்கள் எனவும் எந்த கூட்டணியாக இருந்தாலும் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் கூறினார்.

Exit mobile version