வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் என உயர்நீதிமன்றம் உத்தரவு

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு வழங்கி வரும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பொது நல வழக்கை பரிசீலித்த நீதிபதிகள், சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, எந்த பொருளும் வேண்டாம் என்ற அட்டவனையில் வரும் குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் சர்க்கரை மட்டும் போதும் என்ற குடும்ப அட்டை தாரர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கக் கூடாது என தீர்ப்பளித்தனர். மற்றபடி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கலாம் என தெரிவித்தனர். பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைவருக்கும் வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version