நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பும் தருவாயில் கெலவரப்பள்ளி அணை

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

கர்நாடகத்தின் நந்திமலை, பெங்களூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தமிழகத்தின் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 720 கன அடியாக அதிகரித்துள்ளது. 44 அடி உயரமுள்ள கெலவரப்பள்ளி அணையில் இன்று காலை நிலவரப்படி 41 புள்ளி எட்டு இரண்டு அடிக்குத் தண்ணீர் உள்ளது. விநாடிக்கு 720 கனடிநீர் வந்துகொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்புக் கருதி, 720 கனடிநீரும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பேரண்டப்பள்ளி, கோப்பச்சந்திரம்,பாத்தக்கோட்டா ஆகிய பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

Exit mobile version